BREAKING NEWS
latest

Monday, December 7, 2020

குவைத்தில் கொரோனா மற்றும் மாரடைப்பால் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்:

குவைத்தில் கொரோனா மற்றும் மாரடைப்பால் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்:

சுகுமாரன்     |     சாக்கோ     |     சன்னி

Dec-7,2020

குவைத்தில் இந்திய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் மரணமடைந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் கொரோனா காரணமாகவும் மற்ற இருவர் மாரடைப்பாலும் உயிரிழந்தனர்.

இதில் கோட்டயம் வெள்ளுர் பகுதியைச் சேர்ந்த  சுகுமாரன்(வயது-59) கோவிட் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவர் அல்ஃபவாஸ் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்துவந்தார். இவருக்கு ஷைலாஜா என்ற மனைவியும், சுமிதா மற்றும் சுஷ்மிதா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிட் நெறிமுறையின்படி சுகமார் உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் குவைத் பெந்தேகோஸ் தேவாலயத்தின்  மூத்த உறுப்பினர் பிசி சாக்கோ(வயது-66) அல்-ராசி மருத்துவமனையில் சிகிச்சை இருந்தநிலையில மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இவருக்கு சாலி என்ற மனைவியும், பிரீடா மற்றும் பெவி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளது. குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து, உடல் குவைத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும்.  

இதேபோல் கேரளா ஆலப்புழா மாவேலிகரா ஏசக்கடவு ஊரைச் சேர்ந்த சன்னி குருவிளா(வயது-49) மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடன் மனைவி மரியம்மா மற்றும் மகன் அபேல் குவைத்திலியே வசித்து வருகின்றனர். குவைத் சட்ட நடவடிக்கைகள் முடித்து , அவருடைய உடல் குவைத்திலேயே இன்று  நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சன்னியின் இரண்டு பெண் குழந்தைகள் தாயகத்தில் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் கொரோனா மற்றும் மாரடைப்பால் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்:

« PREV
NEXT »